வெள்ளி, 22 ஜனவரி, 2010

வண்ணங்கள்

அழகழகாய் எத்தனை வண்ணங்கள்


இனி வனமாய்

பெரு வெளியாய்

சுடு மணலாய்

கடு மலையாய்

வெண் முகிலாய்

நீல் வானாய்

கருங்கடலாய்

உறை பனியாய்

நண் பகலாய்

கும்மிருட்டாய் ......................





நீரும் நெருப்பும் காற்றும் மண்ணும் வானும்

கலந்து தீட்டிய அத்தனை வண்ணங்கள் !

புல்லாய் செடியாய்

கொடியாய் மரமாய் ....இனிய வண்ணங்கள் !

முகிலாய், மழையாய்

கடலாய், கண்ணீராய் ....மின்னும் வண்ணங்கள் !

விளக்காய் நெருப்பாய்

அழிவாய், ஆக்கமாய் ......சுடுகின்ற வண்ணங்கள் !

காற்றாய், புயலாய்

உயிராய் ஓட்டமாய் .....ஆடும் வண்ணங்கள் !

மணலாய் பாறையாய்

உடலாய் பொருளாய் ....நிலைத்த வண்ணங்கள் !

சுகமாய் வலியாய்

வெளியாய் உணர்வாய் ....பரந்த வண்ணங்கள் !



பிறந்தேன் வளர்ந்தேன்

பார்த்தேன் ரசித்தேன்

நுகர்ந்தேன் உணர்ந்தேன்

பயந்தேன் வியந்தேன் !



ஓடி ஓடிப் பார்த்ததெல்லாம் அலுத்துப்போகுது

தேடி தேடி சேர்த்ததெல்லாம் அழிஞ்சு போகுது

வாடி வாடி நின்றதெல்லாம் மறைஞ்சு போகுது

போற வழி தேடி மனம் குமைஞ்சு போகுது !



எத்தனை மலைய பாத்தாச்சு; எல்லாம் உசரம்

எத்தனை ஆத்தை பாத்தாச்சு: எல்லாம் தண்ணி

எத்தனை கல்லு பாத்தாச்சு ; எல்லாம் பூமி

எத்தனை கட்டடம் பாத்தாச்சு: எல்லாம் காத்து

எத்தனை செடிக பாத்தாச்சு; எல்லாம் நிறம்தான்

எத்தனை உயிரை பாத்தாச்சு: எல்லாம் ஆசை





பள்ளத்தாக்கும் பாத்தாச்சு

பாலைவனமும் பாத்தாச்சு

கொளுத்தும் வெயிலும் பாத்தாச்சு

குளுரும் பணியும் பாத்தாச்சு



பாளுங்கடவுள் பண்ணிப்போட்ட

பார்வைக்கேத்து பாத்தாச்சு !



சின்னக்குட்டி சிங்காரமாய்

கலைச்சுப்போட்ட புழுதி போல

கெடக்குது ஆகாசம் !

கண்ணைமூடி தொறக்கங்காட்டி

அடங்குது ஆகாசம் !



என்னென்னமோ பாத்திருக்கு

எத்தனையோ புரிஞ்சிருக்கு

நாள வரை பொளுதோட்ட

அர்த்தம் மட்டும் வெளங்க வில்ல !



அர்த்தம் ஒன்னும் வெளங்காம

வெந்தத தின்னு

விதி வந்து போறதுக்கு

மனசு கொஞ்சம் ஒப்பவில்ல !



ஏதேதோ படிச்சிருக்கு

சில விஷயம் புரிஞ்சிருக்கு

புடிச்சிருந்த நெனப்பிருக்கு

நெனப்புக்கு கேடு காலம்

எப்பவுமே வந்திருக்கு !



மண்ணு மண்ணா உருண்டை !

பாக்குற பக்கமெல்லாம் !

பாதி வெந்து பாதி வேகாம !

வெந்து போன சின்ன உருண்டைக்கு

எத்தனை பூச்சி புழு !

1 கருத்து:

  1. சூப்பர்...

    பேச்சு வழக்கு கவிதை...ரொம்ப அழகா இருக்கு வாசிக்க வாசிக்க சுளுவா இருக்கு...

    நிறைய எழுதுங்க சாந்தினி நாங்க இருக்குறோம்ல படிக்க...!

    பதிலளிநீக்கு