வியாழன், 11 மார்ச், 2010

எதுவும் முக்கியமில்லை...

எல்லோரும் போலத்தான் நானும் உண்ணுகிறேன்
நேரம் வந்தால் போகிறேன் புத்தகத்தோடு...
சோபா -வில் கால்நீட்டி "டீ" குடிக்கிறேன்
டிவி -யில் எது வந்தாலும் வெறித்து பார்க்கிறேன்.
தேடித்தேடி திரைப்படங்கள் ...
ஓடி ஓடி உணவகங்கள் ...
மட்டமான ஜோக்குக்கு கூட சிரித்து வைக்கிறேன்.
திட்டு வாங்கினால் கொஞ்சம் அழுது வைக்கிறேன்.
உடல்வலி தலைவலி கால்வலி பல்வலி ...
வேலை, மாத்திரை, டாக்டர் செலவு ...
வாரத்தின் முடிவில் கொஞ்சம் சமைத்து பார்க்கிறேன்
பழகின சுகத்தில் கொஞ்சம் தூங்கி பார்க்கிறேன்.
நிலம், வீடு, கல்யாணம், கருமாதி
வாழ்ந்து பார்த்தல், செத்துப்போதல்...
மாயா வான உலகிலே எதுவும் நிலைப்பதில்லை
மரித்தபின் பின் விரல்கள் எழுத மடங்குவதில்லை
முக்கியமான விஷயமாக என் தோழிக்கு எதை எழுதிப்போடுவது?....
சாந்தினி

முக்கியமானதை சொல் !

இன்றைய காலை இன்னும் புதியதாய் பூத்திருந்தது.
காலையின் வாசம் இன்னும்கூட நாசிகளில்...
சூரியன் நின்று நிதானமாய் ஹலோ சொல்லி நகர்ந்தது.
காற்றும் பக்கம் வந்து காதோர கதை பேசி போனது.
என் வீட்டு பறவைகள் ரகசியங்களை கத்தி கத்தி கூவின.
பனை மரத்து ஆந்தை பகலிலும் என்னை உற்றுப்பார்க்கிறது.
புல்வெளியின் புற்கள் மழை ஈரத்தை சூரிய டவலில் துடைத்துக்கொண்டு ....
பக்கத்து குளத்தின் விடியலின் கரங்கள் வானை நோக்கி நீண்டு கொண்டு ...
நேற்றைய கனவுகள் இன்றைய பொய்களாகவும் ..
இன்றைய நினைவுகள் நாளைய கனவுகளாகவும்.
எல்லோரும் காலை வணக்கம் சொல்கிறார்கள்
கண்களில் சிரிப்பை தேக்கி ....
இன்றைய வேலை குறைவு என்று ...
எனது கம்ப்யூட்டர் என்னை பார்த்து சிரிக்கிறது ...
இன்று என்னை பார்த்துக்கொண்டே இருக்கப்போகிறாய் என..
கீபோர்ட் -க்கு கூட நிறைய சந்தோஷம்
என் கவிதையை உள் வாங்கிக்கொள்ள ...
நண்பரொருவர் அக்கறையாய் அடுத்தவார நிகழ்ச்சியின் நகலொன்றை கொடுத்துப்போனார்.
என் மகன் நான் தோற்காமல் இருக்க ஏதேதோ செய்து பார்க்கிறான் ..
என் தலைவலிக்கு இதமாய் கணவனின் விரல்கள் .....
டீயும் இலக்கியமும் பிரியாத துணையாக
இன்டர்நெட் -ம் சிரிப்புகளும் வாழ்வின் தொடராக ...
தோழி கேட்கிறாள் முக்கியமானதை சொல் ! .....நேரமில்லை என்று ...
அவளுக்கு எப்படி சொல்வது ....என் வாழ்வே முக்கியம்தான் என்று.
சாந்தினி

புதன், 10 மார்ச், 2010

தொலைந்து போக வசதியாய் .....

http://www.tamilish.com/எத்தனை கேள்விகள்

உருவமா

அருவமா

இங்கா

அங்கா

கொடுப்பாயா

எடுப்பாயா

படைப்பாயா

அழிப்பாயா

எத்தனை அனுமானங்கள்

கெட்டவன்

நல்லவன்

இருப்பவன்

இல்லாதவன்

எதுவும் இல்லாதது

அர்த்தம் நிரம்பியது

அன்பே கடவுள்

கடவுள் அன்பு

ஒன்றிலிருந்து ஒன்று

எல்லாம் ஒன்று

தொலைந்து போக வசதியாய் .....

திங்கள், 1 மார்ச், 2010

பொய்யிடம் பொய்யின்றி எதுவுமில்லை.



















இப்படியும் அப்படியுமாய்


திருப்பிப்போட்ட வாழ்வின்

ஆயிரம் ஓட்டைகள்.



அருவெருப்பாயும், பயமாயும் இருக்கிறது.

நான் விழுங்கும் வாழ்வு என்னை விழுங்கிடும் அபாயம்.

துக்கப்பந்து உருண்டு அடைக்கிறது.

விழித்துக்கொண்டே இருந்து களைத்து விட்டது.

உறக்கம், விழிப்பு இரண்டும் பயனில்லை.



சற்று நேரம் என்று எப்போதும் உறங்கிடும் ஆயாசம்

உலகம் என்னை கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறது

என் பதில்கள் என்னை நிறுத்தச்சொல்கின்றன.

அவை பாதி பொய் என்கின்றன.

சிறிது நேரம் சென்று மீதியும் பொய் என்கின்றன.



உறங்கிடும் ஆயாசம் மீண்டும் மூடிக்கொள்கிறது

கண்ணும், காதும், மொழியும் மூடிப்போகட்டும்.

உடல் மண்ணில் மட்கும் வரை.

என்னிடம் எதுவுமில்லை

இருந்தன எல்லாம் விழுந்து விட்டன.



பொய்யிடம் பொய்யின்றி எதுவுமில்லை.

நான் உறங்கப் போகிறேன்......நீளமாக