புதன், 3 பிப்ரவரி, 2010

கவிதைகள்: அன்றும் இன்றும்

உணர்வுகள் பூக்கின்ற காலத்தில் கவிதைகள்

முடிவுகள் காய்க்கின்ற கோலத்தில் கவிதைகள்



எண்ணங்கள் குமிழ்த்ததில் கவிதைகள்

அவையெல்லாம் வடிந்ததில் கவிதைகள்



புரியாத நேரத்தின் கவிதைகள்

புரிந்ததன் சாரத்தின் கவிதைகள்



பரவச பாவத்தின் கவிதைகள்

சமரச ராகத்தின் கவிதைகள்



நினைத்ததை வார்த்தையாக்க கவிதைகள்

நினைத்ததை துடைத்துப்போட கவிதைகள்



------சாந்தினி

1 கருத்து: