புதன், 14 ஏப்ரல், 2010

ஒரு கணம்..!!

இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !

வெல்லாத வாழ்வுமுண்டோ ?
கொல்லாத உயிருமுண்டோ ?

இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !

செல்லாத வழியுமுண்டோ ?
செய்யாத செயலுமுண்டோ ?

இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !

செயலிலே பாவமுண்டோ ?
பாவத்தின் சாபமுண்டோ ?

இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !

ஒரு நீ ..
ஒரு நான்..
ஒரு வாழ்வு..
ஒரு சாவு ..
ஒரு கணம்..!!