ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

காற்றோடு !!!

அன்றொரு நாள் ஆசைகள்

நாங்கள் போகிறோம் என்று சொல்லிப்போயின



மற்றொரு நாளில் அறிவும்

எனக்கு வேலையில்லை என்று கிளம்பிப்போனது



பிறிதொரு நாளில் ஆன்மா

அலுத்துப்போய் காணாமல் போயிற்று



எப்போதும் தேடுவதில்லை !

எப்போதும் தேடுவதில்லை !



மழை சொரிந்து மலர்ந்த மேகமாய்

வானக சஞ்சாரம்; காற்றோடு !!!




1 கருத்து:

  1. ஆசை ஆன்மா அறிவு எல்லாம் காற்றில் கரைந்துவிட்டதா இல்லை காற்றின் உடம்பில் இவையெல்லாம் புகுந்துவிட்டனவா?

    பதிலளிநீக்கு